காதலனை கொன்றது எப்படி?,,,காதலியை வீட்டில் வைத்து விசாரணை - சிக்கிய தடயங்கள்.. அடுத்த அதிரடி

x

காதலனை கொன்றது எப்படி?,,,காதலியை வீட்டில் வைத்து விசாரணை - சிக்கிய தடயங்கள்.. அடுத்த அதிரடி


கேரளாவில், காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவத்தில், கைதான கல்லூரி மாணவியை, வீட்டிற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தமிழக கேரள எல்லை பகுதியான பாறசாலை அருகே, கல்லூரி மாணவரை அவரது காதலி க்ரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் ஏற்கனவே காதலி க்ரீஷ்மா, அவரது தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது நீதிமன்றக்காவலில் உள்ள 3 பேரையும் 7 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து, க்ரீஷ்மாவை அவருடைய வீட்டிற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலைக்கு பயன்படுத்திய தடயங்கள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்