உடல் நலக்குறைவால் உயிரிழந்த காதலன்-காதலியிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

x

கேரளாவில் கல்லூரி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் காதலியே அவரை விஷம் கொடுத்து கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தமிழக கேரளா எல்லையான பாறசால பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் சரோன் ராஜ். இவரும் அதேப் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும், காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சரோன் ராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக காதலி கிரீஷ்மாவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் காதலன் சரோன் ராஜை, ஜோதிடத்தை நம்பி கிரீஷ்மா ரகசிய திருமணம் செய்து கொண்டதும், பின்னர் கஷாயத்தில் விஷம் கொடுத்து கொன்றதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கிரீஷ்மா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்