கேரள, கர்நாடகா மாநில எல்லைகளில் - பாதுகாப்பு அதிகரிப்பு | Kerala | Karnataka

x

கோவை மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து கேரள, கர்நாடகா மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளதாக மேற்குமண்டல ஐஜி சுதாகர் தெரிவித்துள்ளார்.

உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகுந்த எச்சரிக்கையுடன் சோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஓட்டல்கள், விடுதிகளில் தங்குவோர், ஆன்லைனில் முன்பதிவு செய்வோரின் விவரங்களை, கட்டாயம் காவல்நிலையத்திற்கு வழங்க வபேண்டும் என உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஐஜி சுதாகர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்