சாலையின் குறுக்கே ஓடி வந்த நபர்... திடீரென பிரேக் போட்டதால் தலைகீழாக கவிழ்ந்த ஜீப் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x

கேரள மாநிலம் கூத்துப்பரம்பு பகுதியில், சாலையின் குறுக்கே ஓடிய நபர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டதால், ஜீப் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

கூத்துப்பரம்பு பகுதியில் இருந்து பூக்கோடு பகுதி நோக்கி ஜீப் ஒன்று சென்றுள்ளது.

அப்போது, நபர் ஒருவர் சாலையின் மறுபுறத்திற்கு ஓடி கடக்க முயன்றார்.

அவர் மீது மோதாமல் இருக்க ஜீப்பின் ஓட்டுநர் பிரேக் போட்ட நிலையில், ஜீப் தடுமாறி அந்த நபர் மீது மோதி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்