திடீரென பற்றி எரிந்த ICU.. உள்ளே இருந்த 7 குழந்தைகள்..பரபரப்பான மருத்துவமனை-அதிர்ச்சி காட்சி

x

திருச்சூர் மருத்துவமனையில் குழந்தைகள் ஐசியூவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின. கேரளா மாநிலம் திருச்சூரின் ஒளரி பகுதியில் செயல்பட்டு மருத்துவமனையில், குழந்தைகள் ஐசியூவில் தீ விபத்து ஏற்பட்டது. அருகிலுள்ள பிரசவ வார்டுக்கும் புகை பரவியது. நல்வாய்ப்பாக தீ விபத்து ஏற்பட்டவுடன் குழந்தைகள் ஐசியூவில் இருந்த 7 குழந்தைகளும், பிரசவ அறையில் இருந்த 2 கர்ப்பிணிப் பெண்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்த நிலையில், ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்