ரோட்டில் சும்மா நடந்து சென்றவரை தூக்கி வீசி அடித்த 'அரிசி ராஜா' யானை - பதைபதைப்பு காட்சிகள்

x

கேரளா மாநிலம் வயநாட்டில் சாலையில் சென்றவரை மக்னா யானை ஆக்ரோஷமாக தாக்கும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுப் பகுதிகளில் 2 பேரைக் கொன்று அட்டகாசம் செய்த PM2 என்படும் மக்னா வகையை சேர்ந்த அரிசி ராஜா என்ற யானையைப் பிடித்து முதுமலையில் அடர்ந்த வனத்திற்குள் விடுவித்தனர் வனத்துறையினர்... காலர் ஐடி பொருத்தபட்டு யானை கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், கூடலூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி சுங்கம் பகுதியில், இன்று அதிகாலை 3 மணிக்கு சாலையில் சென்ற ​ெ​தொழிலாளி ஒருவரை அந்த யானை ஆக்ரோஷமாக தாக்கி தூக்கி வீசியது... இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து சென்ற அந்த யானை அவ்வழியே சென்ற பேருந்தைத் துரத்தியது... பின் அங்கிருந்து கடைவீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் முன் சுற்றிய அந்த மக்னா யானை, பின் முள்ளங்குன்று வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்