"தலைகீழாக தான் தொங்குவேன்.."'BatMan' ஆக மாறிய போதை ஆசாமி-ஆலமர விழுதில் தொங்கி வித்தை-வெளியான வீடியோ

x

போதை தலைக்கேறிய மதுப்பிரியர் ஒருவர் ஆலமர விழுதைப் பிடித்து உச்சிக்கு சென்று தொங்கியபடி ஆபத்தான வித்தை காட்டிய அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது... கேரள மாநிலம் கோட்டயத்தில் கோயில் திருவிழாவின் போது நன்கு குடித்திருந்த போதை ஆசாமி கோயில் முன்பிருந்த ஆலமரத்தில் ஏறி, மேள தாளங்களுக்கு ஏற்ப தன்னை batmanஆக நினைத்துக் கொண்டு வவ்வாலைப் போல் தலைகீழாய்த் தொங்கியபடி ஆபத்தான வித்தைகளைக் காட்டினார்... ஒருவழியாக அவரைக் கீழே இறங்க வைத்து பொதுமக்களும் போலீசாரும் நன்கு புரியும்படி எச்சரித்து அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்