கேரளாவில் மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை - 17 கிராம் எம்டிஎம்ஏ பறிமுதல்

x

கேரளாவில் எம்டிஎம்ஏ போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கஞ்சா மற்றும் எம்டிஎம்ஏ என்ற போதை பொருளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்களுக்கு விற்பனை செய்யவதற்காக பெங்களூருவில் இருந்து போதை பொருள் கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி மலப்புரம் நிலம்பூரில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த கருளாய் பகுதியை சேர்ந்த ஷராபுதீன், ரம்ஜான் என்ற இருவரை கைது செய்து, 17 கிராம் எம்டிஎம்ஏ போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்