சபரிமலை அரவணை டின் ஒப்பந்ததாரருக்கு கேரளா நீதிமன்றம் எச்சரிக்கை

x

சபரிமலை அரவணை டின் விநியோகம் செய்யும் ஓப்பந்த நிறுவனத்திற்கு கேரளா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒப்பந்ததாரர் தேவையான அரவணை டின் வழங்கவில்லை என சிறப்பு ஆணையர் கேரளா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வழக்கில் தேவைக்கேற்ப டின் வழங்கினால் மட்டுமே ஒப்பந்தம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிமன்றம், அரவணை டின் வழங்குவதில் ஒப்பந்ததாரர் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். சிறப்பு ஆணையரின் அறிக்கைக்கு பதிலளிக்க ஒப்பந்ததாரருக்கும், தேவசம்போர்டுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்