பச்சிளங்குழந்தையை கழிவறையில் வீசிய இளம்பெண்.. ஆய்வில் குழந்தைக்கு உயிர் இருந்ததால் அதிர்ச்சி!

x
  • பச்சிளங்குழந்தையை கழிவறையில் வீசிய இளம்பெண் .. ஆய்வில் குழந்தைக்கு உயிர் இருந்ததால் அதிர்ச்சி! - வாளியில் குழந்தைக்கு தூக்கி மருத்துவமனைக்கு ஓடிய போலீஸ்
  • கேரளாவில் வாளியில் மறைத்து வைக்கப்பட்ட பச்சிளங்குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
  • கேரள மாநிலம் செங்கனூரில், ரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு சென்ற பெண், தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதால் கழிவறையில் வீசியதாக தெரிவித்துள்ளார்.
  • உடனடியாக மருத்துவர் புகார் அளித்ததால், போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர்.
  • அப்போது வாளியில் குழந்தை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் உடலில் அசைவு தெரிந்துள்ளது.
  • ஆச்சரியமடைந்த போலீசார் குழந்தையுடன் வாளியை தூக்கியபடி, மருத்துவமனையில் சேர்த்தனர்.
  • விசாரணையில் முறையற்ற உறவின் மூலம் பிறந்த குழந்தையை, வீட்டிலேயே பிரசவித்து இளம்பெண் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்