போதையில் காரை கடைக்குள் விட்ட டிரைவர்.. டீ குடித்த மூதாட்டி உடல் நசுங்கி பலி - பதைபதைக்கும் சம்பவம்

x
  • மதுபோதையில் கார் ஓட்டுநர் ஒருவர் டீக்கடைக்குள் காரை விட்டதில் அங்கிருந்த 70 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரத்தில் நிகழ்ந்துள்ளது...
  • கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள டீக்கடைக்குள் நின்று வேளானூர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளி என்ற 70 வயது மூதாட்டி டீ குடித்துக் கொண்டிருந்தார்.
  • அப்போது அவ்வழியே சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்ததில் மூதாட்டி வெள்ளி பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். ச
  • ம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், மது போதையில் விபத்தை ஏற்படுத்தியது சேலத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பது கண்டறியப்பட்டது.
  • அவரைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்