ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிரான கே.சி.பழனிசாமியின் மனு..தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

x

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய கே.சி.பழனிசாமியின் மனுவை உச்சநீதீமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 2017, செப்டம்பர் 12ம் தேதி பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும் என கே.சி. பழனிசாமி கடந்த 2019ம் ஆண்டு ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 18ம் தேதி வழக்கை முடித்து வைத்தது. இதனிடைய இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த ரிட் மனுவை முன்னெடுக்க விரும்பவில்லை என தெரிவித்ததை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் அவரது ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்