தட்டி கேட்ட சமையல் மாஸ்டரின் உயிரை குடித்த போதை இளைஞர்கள் - கரூரில் பயங்கர சம்பவம்

x
  • கரூரில் வீட்டு முன்பு மது அருந்திய இளைஞர்களை தட்டிக்கேட்ட சமையல் மாஸ்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கரூர் கிட்டி சாகிப் தெருவை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் சரவணன். இவர் சம்பவத்தன்று தனது தாயுடன் வீட்டில் இருந்த போது, வீட்டு முன்பு சில இளைஞர்கள் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
  • இதனால், கோபமடைந்த சரவணன், அவர்களை தட்டி கேட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது.
  • இதில், இளைஞர்கள் சரவணின் வீட்டினுள் இருந்தே கத்தியை எடுத்து, சரவணை குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதன்பின்னர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட சரவணனின் உடலை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
  • இதனிடையே, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கரூர் ரவுடியான தமிழரசன் மற்றும் சஞ்சய் என்பது தெரியவர போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்