"பரந்தூர் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர்"... - மத்திய அரசுக்கு நெல்லை எம்.பி. கடிதம்

x

சென்னையில் அமைய இருக்கும் இரண்டாவது விமான நிலையத்திற்கு மறைந்த தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று, நெல்லை எம்பி ஞான திரவியம் வலியுறுத்தியுள்ளார்.

ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து துறைக்கு அவர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில்,

வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்று, சென்னையில் அமைய இருக்கும் இரண்டாவது விமான நிலையத்துடன், ரயில் நிலையத்தையும் ஒருங்கிணைத்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்