கருணாநிதியின் நூற்றாண்டு விழா - அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு

x

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு காஞ்சிபுரம் கோவளம் ஊராட்சி நிர்வாகம் கல்வி உபகரணங்களை வழங்கியது. இந்நிகழ்வின் போது 12ம் வகுப்பில் கோவளம் ஊராட்சியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக 2 ஆயிரம் பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்