மீண்டும் விசாரணையில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் | விசா முறைகேடு வழக்கு

x

விசா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டெல்லி உயர்நிதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது. சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அவரது முன்ஜாமின் மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெறும் என்று டெல்லி உயர்நிதிமன்றம் கூறியுள்ளது. எனவே முன்ஜாமின் மனு மீதான விசாரணையை 15ஆம் தேதி கோடைகால அமர்வு முன் பட்டியலிட உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்