சுரங்கப்பாதை கேட்டு போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்... சரமாரியாக தடியடி நடத்திய காவல் துறையினர்

x
  • சுரங்கப்பாதை கேட்டு போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்... சரமாரியாக தடியடி நடத்திய காவல் துறையினர்

  • மண்டியா மாவட்டத்தில் இப்போராட்டம் நடைபெற்றது. பெங்களூரு மைசூர் தேசிய நெடுஞ்சாலையை 10 வழிச்சாலையாக மாற்றியுள்ள நிலையில் பல நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
  • அதே சமயம் மண்டியாவின் ஹனகரே என்ற கிராமத்தின் வழியாக இந்த தேசிய நெடுஞ்சாலை செல்லும் நிலையில், கிராம மக்கள் கடந்து செல்ல தங்களுக்கு சுரங்கப் பாதை அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
  • ஆனால் சுரங்கப் பாதை அமைக்காமலேயே 10 வழிச்சாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
  • சமாதான பேச்சுவார்த்தைக்கு ஒத்து வராத நிலையில், காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த போராட்டத்தினால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பெங்களூரு மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்