வேலை செய்து கொண்டிருக்கும்போதே பலியான கணவன், மனைவி.. மனதை உலுக்கும் சோகம்

x
  • கர்நாடகாவில் கட்டிடப் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில், பெண் உட்பட மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  • தட்சினகன்னடா மாவட்டம் சுள்ளியா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த சோமசேகர ரெட்டி, அவரது மனைவி சாந்தா மற்றும் ஒரு தொழிலாளி ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • அப்போது கட்டிடத்தின் பின்பகுதியில் இருந்த மரம் வேரோடு சரிந்து கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.
  • இதில் மூன்று பேரும் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
  • சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்பு பணிகளை தொடங்கினர்.
  • இரண்டு பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில்,ஒருவரது உடலை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டிடப் பணிகளை மேற்கொள்ளவில்லை என கட்டிட உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்