மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல்... ஊர்வலத்தில் வெடித்த கலவரம்... கர்நாடகாவில் பதற்றம்...

x
  • கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்திலுள்ள ரட்டிஹல்லி என்ற பகுதியில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சங்கொல்லி ராயண்ணா சிலையை நிறுவுவதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
  • அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஊர்வலம் தங்கள் பகுதி வழியாக செல்லக்கூடாது என வழிமறித்தனர்.
  • இதனை கண்டிக்கும் விதமாக இந்து அமைப்பினர் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.
  • அப்போது சிலர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் மசூதி மற்றும் வீடுகளின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
  • இதில் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பதற்றமான சூழல் உருவானதால்,பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
  • பின்னர் கல்வீச்சில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்