தமிழகத்திற்கு சொந்தமான இடத்தில் அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசு - தட்டி கேட்ட அமைச்சர் துரைமுருகன்

x

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டப்போவதாக சொல்லும் இடம், தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்றும், அங்கு அணை கட்ட முடியாது எனவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார். இதற்காக நேற்று டெல்லி புறப்பட்டார். அவர், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் காவிரி மேலாண்மை வாரியத்திடம், காவிரியில் தண்ணீரை திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்க உள்ளதாக, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதை பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்