களை கட்டும் கர்நாடக தேர்தல்..எடியூரப்பா முதன் முதலில் வாங்கிய அம்பாசிடர் காரில் பிரசாரம்

x

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியுரப்பாவின், மகன் விஜயேந்திரா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்த விஜயேந்திரா தந்தை எடியூரப்பாவிடம் ஆசி பெற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடியூரப்பா தான் முதன் முதலில் வாங்கிய அம்பாசிடர் காரில் அமர்ந்து பயணித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார். விலை உயர்ந்த சொகுசு கார்கள் இருந்த போதிலும் எடியூரப்பா தனது முதல் காரில் பயணித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்