அரசு மருத்துவமனையில் பிறந்த சிசுவை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த நாய் - கர்நாடகாவில் அதிர்ச்சி

x
  • கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மகப்பேறு வார்டு அருகே, புதிதாகப் பிறந்த சிசுவை நாய் ஒன்று வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்தது.
  • இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர், அதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
  • இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் நாயை அடித்து விரட்டி, அதனிடம் இருந்து சடலத்தை மீட்டனர்.
  • மருத்துவமனையில் பிறந்த குழந்தையை நாய் கவ்விச் சென்றதா? அல்லது உயிரிழந்துவிட்டது என யாராவது வீசிய குழந்தையை நாய் கவ்வியதா என்பது குறித்து, மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்