"நான் சொல்ற இடத்தில நிற்க மாட்டி.." அக்கா சொன்ன ஒரே வார்த்தையில் நடத்துநரின் கண்ணத்தை கிழித்த தம்பிகள்

x

தான் சொன்ன இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் பெண் ஒருவர் உறவினர்களை ஏவி நடத்துநரை தாக்கிய பரபரப்பு சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு இலவச பேருந்து சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவிலிருந்து சித்ரதுர்காவிற்கு சென்ற அரசு அதி விரைவு பேருந்தில் ஏறிய சந்திரிகா என்ற பெண், தான் சொன்ன இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் நடத்துநருடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஒரு படி மேலே சென்று தன்னுடன் வந்த உறவினர்கள் நால்வரை ஏவி நடத்துநரைத் தாக்க வைத்துள்ளார் அப்பெண். இதைக் கண்டு அதிர்ந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி விட்டு நடத்துநரை மீட்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், சந்திரிகா மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்