ஆடையின்றி வீடியோ காலில் பேசிய சாமியார் உயிரை காவு வாங்கிய சபலம் - இளம்பெண் பகீர் வாக்குமூலம்
ஆடையின்றி வீடியோ காலில் பேசிய சாமியார் உயிரை காவு வாங்கிய சபலம் - இளம்பெண் பகீர் வாக்குமூலம்
கர்நாடகாவில் மடாதிபதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மடாதிபதியின் சகோதரர், இளம்பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராம்நகர் மாவட்டத்தில் உள்ள காஞ்சக்கல் பாண்டே மடத்தில் மடாதிபதியாக இருந்த பசவலிங்கம், கடந்த 24 ஆம் தேதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், மடாதிபதி பதவி மற்றும் சொத்துக்களை தட்டிப்பறிக்க சிலர் மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மடாதிபதியுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்ணூர் மடத்தின் மடாதிபதி மிருதுந் ஜெயஸ்ரீ, பொறியியல் கல்லூரி மாணவி நீலாம்பிகை, வழக்கறிஞர் மாதேவையா ஆகியோர் சேர்ந்து, மடாதிபதி பாசவலிங்காவை, பெண்களின் மாயவலையில் சிக்க வைக்க வைத்ததாக கைதான பெண் தெரிவித்துள்ளார். மேலும், மடாதிபதிகளான பசுவலிங்காவுக்கும், அவரது சகோதரரான மிருதுந்ஜெயஸ்ரீக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாகவும், சொத்துக்களை அடைய திட்டமிட்டு இந்த மிரட்டல் நாடகத்தை மிருதுந்ஜெயஸ்ரீ அரங்கேற்றியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மிருதுந்ஜெயஸ்ரீ மற்றும் வழக்கறிஞர் மாதேவையாவையும் போலீசார் கைது செய்தனர்.