1 மாதம் முன் அமெரிக்காவில் பறந்த பலூன்கள்... திடீரென விவசாய நிலத்தில் கிடந்த பலூன் - கர்நாடகாவில் உச்சகட்ட பரபரப்பு

x
  • கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் விவசாய நிலையத்தில் எலக்ட்ரானிக் சாதனத்துடன் பலூன் விழுந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • பெலகாவி மாவட்டத்தில் உள்ள கடிகர வினகோப்பா கிராமத்தின் வயல்வெளியில் எலக்ட்ரானிக் சாதனத்துடன் பலூன் ஒன்று விழுந்து கிடந்ததை கிராம மக்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
  • சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், பலூனைக் கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.
  • பலூனில் இணைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனம் எதற்காக பயன்படுத்தப்படுவது, நாசவேலைக்கு ஏதேனும் திட்டமிடப்பட்டுள்ளதா என்பது குறித்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
  • ஒரு மாதத்திற்கு முன் அமெரிக்காவில் சீன உளவு பலூன்கள் பறந்த சம்பவங்கள் நடந்த நிலையில், கர்நாடகாவில் பலூன் பறந்திருப்பது பரபரப்பை கூட்டி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்