கர்நாடக சட்டமன்ற தேர்தல்...விறுவிறுப்பாக முடிந்த வேட்புமனு தாக்கல் - வெளியான முக்கிய தகவல்

x

கர்நாடக சட்டமன்றத் தேர்தல், மே மாதம் 10-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான வியாழக்கிழமை ஒரே நாளில், ஆயிரத்து 691 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.ஒட்டுமொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 632 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில், பெண் வேட்பாளர்கள் 304 பேர், ஒரே ஒரு திருநங்கை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.மொத்தமுள்ள 3 ஆயிரத்து 632 வேட்பாளர்களில், பலர் இரு முறைக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால், மொத்தமாக இதுவரை 5 ஆயித்து 102 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்