ஒடிசா ரயில் விபத்து குறித்து அவதூறு.. கன்னியாகுமரி நபர் கைது

x

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, பிரிவினை ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நீதிமன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, முகமது ஷெரீப் என்ற இஸ்லாமியரை கைது செய்ய வேண்டும் என, தனது ட்விட்டரில் பதிவிட்டதாக தெரிகிறது. பொது மக்கள் மத்தியில் பிரிவினை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக புகார் எழுந்த நிலையில், தக்கலை போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்