"ஓரின சேர்க்கைக்காக வட மாநில இளைஞர் கடத்தல்" - சைக்கோ நபரால் பரபரப்பு - வைரலாகும் வீடியோ

x
  • கன்னியாகுமரியில், இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்ற வடமாநில இளைஞரை, ஓரின சேர்க்கைக்காக, வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் கடத்த முயற்சித்த சைக்கோ நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
  • சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், வட மாநிலங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
  • நான்கு வழிச் சாலை அருகே, இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் வட மாநில இளைஞர்களை குறிவைத்து, சைக்கோ இளைஞர் ஒருவர், வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கைக்கு கடத்திச் செல்வதாக புகார்கள் எழுந்தன.
  • இந்த நிலையில், அதே பகுதியில் வட மாநில இளைஞர் ஒருவரை, சைக்கோ நபர் ஓரினச்சேர்க்கைக்காக வலுக்கட்டாயமாக தனது இருசக்கர வாகனத்தில் கடத்த முயற்சித்துள்ளார்.
  • அப்போது, வட மாநில இளைஞர் அழுது கூச்சலிட்டு, அவரிடமிருந்து தப்பித்து ஓட முயற்சித்தார்.
  • இதனை சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்