"தெரிந்ததை விட தெரியாதது அதிகம்" - 'காந்தாரா'-வை புகழ்ந்து தள்ளிய ரஜினி

x

"தெரிந்ததை விட தெரியாதது அதிகம்" - 'காந்தாரா'-வை புகழ்ந்து தள்ளிய ரஜினி

காந்தாரா படம் இந்திய சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். கன்னட படமான காந்தாரா நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பின்னர் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், தெரிந்ததைவிட தெரியாதது அதிகம் என்பதை காந்தாரா படம் மிகச்சிறப்பாக காட்டியுள்ளதாக புகழ்ந்துள்ளார். படம் சிலிர்க்க வைத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த், படத்தின் எழுத்தாளரும், இயக்குநரும், நடிகருமான ரிஷப் செட்டியை தலைவணங்குவதாக போற்றியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்