சிலிண்டருக்கு பணம் கேட்ட மாமனார்... ஆத்திரத்தில் மருமகன் செய்த கொடூர செயல் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

x
  • குமரி மாவட்டம் மணலிக்கரை ஆண்டாம் பாறையைச் சேர்ந்த கிறிஸ்துதாசுக்கு 3 மகள்கள் உள்ளனர்...
  • மனைவி இறந்த நிலையில், கிறிஸ்து தாஸ் 3வது மகள் ஜான்சி வீட்டில் வசித்து வந்துள்ளார்...
  • நேற்று வீட்டில் அவர் மயங்கிக் கிடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஜான்சி மற்றும் மருமகன் பாக்யராஜ் ஆகியோர் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.
  • அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறவே, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்...
  • அப்போது கிறிஸ்து தாசுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாகவும் ஜான்சியும் பகயராஜும் போலீசில் கூறியுள்ளனர்.
  • சந்தேகத்தின் பேரில் போலீசார் பாக்யராஜிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்...
  • காவல் துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், பாக்யராஜ் தனது மாமனாரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்...
  • அப்போது, இருவரும் நேற்றிரவு மது அருந்திக் கொண்டிருந்த போது கிறிஸ்து தாஸ் சிலிண்டருக்கு தன்னிடம் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும், தான் இல்லை என கூறியும் மீண்டும் மீண்டும் கேட்டதால் ஆத்திரத்தில் அங்கிருந்த கோடாரியை எடுத்து கிறிஸ்து தாசை தலையில் தாக்கி கொலை செய்து விட்டு கோடாரியை கிணற்றில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்