குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சு - மன்னிப்பு கேட்ட கனிமொழி எம்பி

x

குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சு - மன்னிப்பு கேட்ட கனிமொழி எம்பி


குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியதற்கு, திமுக எம்பி கனிமொழி டிவிட்டர் மூலம் மன்னிப்பு கோரினார். திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், பாஜக நிர்வாகியான குஷ்பு குறித்து ஆபாசமாக பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள குஷ்பு, இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பியுள்ளார். அதே நேரத்தில், பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்பதாக கனிமொழி எம்பி டிவிட்டரில் பதிலளித்துள்ளார். யாராக இருந்தாலும் இதுபோன்ற பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள கனிமொழி, தனது கட்சியும் தலைவர் ஸ்டாலினும் இதனை மன்னிக்க மாட்டார்கள் என்று கூறி, இந்த பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்