"அதிகாரி செய்ற வேலையா இது.." காதலியின் திருமணத்தை நிறுத்த இழி செயலில் விஏஓ... காஞ்சி அருகே பரபரப்பு

x

காஞ்சிபுரம் அருகே முன்னாள் காதலியின் திருமணத்தை தடுக்க இழிசெயலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மதுரமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் வல்லக்கோட்டை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். ஜாதகம் சரியில்லை என்பதற்காக ஐந்தாண்டுகள் பழகி வந்த காதலியை திருமணம் செய்யாமல் இவர் கழற்றிவிட்டுள்ளார். இதனிடையே காதலிக்கு வேறொரு மாப்பிள்ளையுடன் நிச்சயிக்கப்பட்டு, பிப்ரவரி 3ஆம் தேதி திருமண ஏற்பாடு நடைபெற்று வந்தது. இதனை அறிந்த விஏஓ ராஜேஷ், மாப்பிள்ளையின் செல்போனுக்கு காதலியின் புகைப்படத்தை அனுப்பி, திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த பெண் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் விஏஓ ராஜேஷை சாலவாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்