மரம் விழுந்து முறிந்த தொழிலாளி கால் வலியில் துடிதுடித்தும் வராத '108' -JCB-யில் மருத்துவமனை சென்ற துயரம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், காயமடைந்தவரை ஜேசிபியில் வைத்து ம ருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளன​ர்.

உத்திரமேரூர்- வந்தவாசி சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக, மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த, ரமேஷ் என்ற தொழிலாளி ​​மீது மரக்கிளை விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ்-க்கு அழைத்த நிலையில் ஒரு மணி நேரமாகியும் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளிகள் ஜேசிபி இயந்திரம் மூலம், அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்