கேள்வி கேட்ட உறுப்பினர்... நடுரோட்டில் அடித்து உதைத்த ஊராட்சி மன்ற தலைவர்

x

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர், திமுக இளைஞரணி நிர்வாகியாகவும், மலைப்பட்டு ஊராட்சியின் ஒன்றாவது வார்டு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மலைப்பட்டு ஊராட்சியில் நடைபெறும் முறைகேடு மற்றும் கையாடல் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபனிடம் கேள்வி கேட்டு வந்துள்ளார். இதனால் பத்மநாபன் ஆதரவாளர்களுக்கும், கமலக்கண்ணனுக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பத்மநபான் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கமலக்கணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில், பத்மநாபன் மற்றும் அவரது மகன்களான ராமன், லட்சுமணன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்