40 அடி உயர விஸ்வரூப பாலமுருகனுக்கு 2000 லிட்டர் பாலாபிஷேகம் | KANCHIPURAM

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, விஸ்வரூப பாலமுருகனுக்கு, சுமார் 2 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. தண்டலத்தில் அமைந்துள்ள விஸ்வரூப பாலமுருகன் ஆலயத்தில், ஒரே கல்லால் ஆன 180 டன் எடை கொண்ட 40 அடி உயர பாலமுருகன் மூலவராக காட்சியளிக்கிறார். வருஷாபிஷேகத்தை முன்னிட்டு பாலாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், பெண்கள் 108 பேர் பால்குடம் சுமந்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன், சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்