'போலாம் ரைட்..!' பேருந்தை ஓட்டிய எம்எல்ஏ.. திடீரென பள்ளத்தில் சரிந்ததால் பதறிய மக்கள் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு காட்சி

x
  • காஞ்சிபுரம் அருகே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ, பேருந்து ஓட்டிய நிலையில், பள்ளத்தில் சாய்ந்து கவிழும் நிலை ஏற்பட்டது.
  • கீழ்கதிர்பூரில், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் மற்றும் திமுக எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வழித் தடத்தில் அரசு பேருந்து ஒன்றை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
  • தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திமுக எம்எல்ஏ எழிலரசன் அரசு பேருந்தை இயக்கினார்.
  • அப்போது, கட்டுபாட்டை இழந்த அந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி, அருகில் இருந்த மின் கம்பம் மீது சாய்ந்து நின்றது.
  • இதனால், அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்