திடீரென ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி... ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான 12 வயது சிறுமி - திருவிழாவின் போது அரங்கேறிய சோகம்

x
  • வாலாஜாபாத் அடுத்த விச்சாந்தாங்கலில் அங்காளம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
  • இதில், மாட்டு வண்டியில் ஜெனரேட்டர் வைத்து வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது.
  • அப்போது, யாரும் எதிர்பாராதபோது, 12 வயது பள்ளி சிறுமியான லாவண்யா மாட்டு வண்டியில் பின்புறத்தில் ஏறியபோது, அவரின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியது.
  • இதில், படுகாயம் அடைந்த அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • இந்நிலையில், லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழக்க உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
  • இதனிடையே அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி, ஜெனரேட்டர் உரிமையாளரான முனுசாமி மீது வழக்குபதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்