நேருக்கு நேர் மோதி பற்றி எரிந்த கார் - லாரி - சென்னை- பெங்களூரு சாலையில் பயங்கரம் | Car | Lorry

x
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, காரும் சரக்கு லாரியும் மோதிய விபத்தில், இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தது. தண்டலம் பகுதியில் அரக்கோணம் கூட்டு சாலை அருகே நிகழ்ந்த இவ்விபத்தில், சரக்கு வாகனம் மற்றும் காரில் இருந்தவர்கள், உடனே வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
  • தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
  • இந்த தீ விபத்து காரணமாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்