சிதம்பரம் கோயிலில் கனகசபை அறிவிப்பு - "எதையெல்லாம் செய்யக் கூடாதோ.." -அறநிலையத்துறை அமைச்சர் ஆவேசம்

x

சிதம்பரம் கோயிலில் கனகசபை - அறிவிப்புகளை, அறநிலையத்துறையுடன் ஆலோசிக்காமல் வெளியிடுவது ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துளாளர். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்வதுதான் அங்கிருக்க பணியாக இருப்பதாக குற்றம் சாட்டினார். சம்பந்தப்பட்ட அதிகாரி சென்று பலகையை எடுக்க சொன்ன போது தகராறு செய்தார்கள் என்ற அமைச்சர் சேகர்பாபு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்