"7 நாட்களாக செத்துக் கொண்டிருக்கிறேன்"- பாரத் ஜோடோ யாத்திரை குறித்து கமல்நாத் பேச்சு

x

கடந்த 7 நாட்களாக செத்து கொண்டிருப்பதாக பாரத் ஜோடோ யாத்திரை குறித்து, மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் பேசி இருப்பதை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல்காந்தி தலைமையில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வருகிறது.

தென்னிந்தியாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் யாத்திரை குறித்து முன்னாள் முதலமைச்சரும், மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கமல்நாத் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜோதிடரான பிரதீப் மிஷ்ரா என்பவரிடம் பேசிய கமல்நாத், பாரத் ஜோடோ யாத்திரையில் தினமும் 24 கிலோ மீட்டர் தூரம் பயணிப்பதாக தெரிவித்தார்.

அதை கேட்டதும் பிரதீப் மிஷ்ரா ஆச்சர்யம் தெரிவிக்க, கடந்த 7 நாட்களாக பாரத் ஜோடோ யாத்திரையால் செத்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், பாஜகவினர் கிண்டலடித்து வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்