கமல்ஹாசன் பட பாணியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வசமாக சிக்கிய தேர்வர்..

x

.புதுக்கோட்டையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய தேர்வர், காதில் ப்ளூடூத் வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பொறியாளர் பணியிடங்களுக்கான துறை ரீதியான தேர்வு டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெற்றது. புதுக்கோட்டையில் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில், தர்மர் என்பவர் காதில் ப்ளூடூத் வைத்துக்கொண்டு, வெளியில் இருந்து கேள்விக்கான பதில்களை பெற்று தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்த‌தும், வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்