திமுக நகர மன்ற தலைவரின் காரை உருட்டுகட்டையால் அடித்து நொறுக்கிய இளைஞர்.. பெண் பணியாளர்களிடம் மட்டும் குறைகளை கேட்டதால் ஆத்திரம்

x
  • கள்ளக்குறிச்சியில் பெண் தூய்மை பணியாளர்களிடம் மட்டும், குறைகளை கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், திமுக நகர மன்ற தலைவரின் அரசு காரை அடித்து நொறுக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
  • விளம்பார் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அமர்நாத், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளராக பணி செய்து வந்துள்ளார்.
  • இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரை அழைத்த நகராட்சி ஆணையர் குமரன், நகர மன்ற தலைவர் சுப்புராயலு முன்னிலையில் கூட்டம் நடத்தி அனைவருக்கும் பிரியாணி விருந்து அளித்துள்ளார்.
  • இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் அமர்நாத் திடீரென உருட்டு கட்டையை எடுத்து வந்து நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த திமுக நகர மன்ற தலைவர் சுப்புராயிலுவின் அரசு காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார்.
  • இந்த சம்பவத்தை கண்ட நகராட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசாரை வரவழைத்து இளைஞர் அமர்நாத்தை போலீசில் ஒப்படைத்தனர்.
  • போலீசார் அமர்நாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
  • விசாரணையில், நகராட்சி ஆணையர் குமரன் பெண் பணியாளர்களை மட்டும் அழைத்து பேசுவதாகவும், ஆண் பணியாளர்களை அழைத்து பேசவில்லை என்ற அதிருப்தி காரணமாகவே காரை அடித்து நொறுக்கியதாக தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்