களைக்கட்டிய வாரச்சந்தை... ஆடு விற்பனை அமோகம்..! - ஒரு நாள் வர்த்தகம் எவ்வளவு தெரியுமா?

x

களைக்கட்டிய வாரச்சந்தை... ஆடு விற்பனை அமோகம்..! - ஒரு நாள் வர்த்தகம் எவ்வளவு தெரியுமா?

ரிஷிவந்தியம் அருகே நடைபெற்ற வாரச் சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் கிராமத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறும். இதில் அதிகளவில் ஆடுகள் விற்பனை ஆகும். வரும் வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றைய தினம் நடைபெற்ற வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சுமார் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக கூறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்