அழிவை நோக்கி செல்லும் துவக்கப்பள்ளி... ஒரு மாணவர் கூட இல்லை...ஆசிரியர் மட்டும் பள்ளிக்கு வரும் அவலம்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மாணவர்கள் இல்லாமல், ஆசிரியர் மட்டும் பள்ளிக்கு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கீழைப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், சில வருடங்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். இந்நிலையில், மாணவர்களின் என்ணிக்கை குறைந்து வந்ததால், அப்பள்ளியில் பணியாற்றிய ஒரு சில ஆசிரியர்கள் இடம் மாற்றம் செய்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய காரணத்தை கண்டறிந்து, மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்