கலாஷேத்ரா விவகாரம்.. டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்ற தேசிய மகளிர் ஆணையம்

x
  • கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில், தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.
  • அந்த கல்லூரியின் ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
  • ஆனால், பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட மாணவி, தான் எந்தவிதமான பாலியல் தொந்தரவுக்கும் ஆளாகவில்லை என்றும், தனது பெயரை கெடுக்க பொய்யான தகவலை பரப்புவதாக, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • அதனடிப்படையில், பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்த தேசிய மகளிர் ஆணையம், தனது நோட்டீஸை வாபஸ் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்