கலாஷேத்ரா ஆசிரியர் மீது பாலியல் புகார்... "எந்த வித புகாரையும் நான் அளிக்கவில்லை.." - சம்பந்தப்பட்ட மாணவி போலீசில் புகார்

x
  • சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ராவின் ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்து இணையத்தில் பதிவுகள் பரவிய நிலையில் இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்தது.
  • இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு உத்தரவிட்ட நிலையில் இந்த புகார் மனு குறித்து விசாரிக்க சென்னை காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவிட்டார்.
  • இதனிடையே சமூக வலைதளத்தில் பரவிய புகாரில் உள்ள மாணவி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
  • அதில் எந்த விதமான புகாரையும் தான் முன்வைக்கவில்லை என்றும், ஆசிரியர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக அவர் அளித்திருக்கும் மனுவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்