நீதிபதி விக்டோரியா கவுரி நியமன விவகாரம் - நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

x

வழக்குரைஞர் எல்.சி விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்த விவகாரம் குறித்து, தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மூத்த வழக்குரைஞர் ராஜீவ் ராமச்சந்திரன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி முறையிட்டார். முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் இது தொடர்பான மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது. அவரது நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மனு நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்