ஜூஸ் குடிப்பவர்களே உஷார்... எலி கடித்த பழத்தில் ஜூஸ் - ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

பருத்திப்பட்டு அயப்பாக்கம் சாலையில் உள்ள ஜூஸ் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் ஜூஸ் ஆர்டர் செய்துள்ளார். அப்போது அங்கிருந்த பழங்களில் சிலவற்றை எலி கடித்திருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, உணவு பாதுகாப்புத் துறையிடம் புகார் அளித்த நிலையில், கடையானது உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும், புகார் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். வெயில் காலத்தில், பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ் குடித்தால் ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்படும் என கருதி இயற்கையான ஜூஸ் குடிக்கலாம் என சென்றவருக்கு எலி கடித்த பழங்களில் ஜூஸ் வழங்கப்பட்டது வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்