ஓய்வு பெற்ற பெண் வட்டாட்சியருக்கு நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு

x

திருவள்ளூரில், சொத்து மதிப்பு சான்று வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், ஓய்வுபெற்ற பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த துளசிராமன் என்பவர், தான் வாங்கிய புதிய மினி பேருந்துக்கு சொத்து மதிப்பு சான்று கோரி கடந்த 2013ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது வட்டாட்சியராக பணியாற்றிய திலகம் என்பவர், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கைதாகி, அதுகுறித்த வழக்கு திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மேல்அரசன், திலகத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், 40 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்