நீதிபதிகள் Vs வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டி.... வழக்கறிஞர்கள் அணியை வீழ்த்திய நீதிபதிகள்
கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையே நடந்த இண்டோர் கிரிக்கெட் போட்டியில், நீதிபதிகள் அணி வெற்றி பெற்றது.
கடவேந்தரா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் என 8 அணிகளாக கலந்து கொண்டனர்.
இதில் நீதிபதிகள் அணிக்கு எதிராக டாஸ் வென்ற வழக்கறிஞர்கள் அணி, பேட்டிங் தேர்வு செய்து, 6 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, 54 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய நீதிபதிகள் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தனர்.
Next Story